போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! |
மேடைபேச்சு, பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்றவர் சந்தியா. 'சவுண்டு சந்தியா' என்ற அவருக்கு பட்டப்பெயர்கூட உண்டு. தனது பேச்சுதிறனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு 'கண்மணி' சீரியலில் அறிமுகமான சந்தியா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சக்திவேல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'மெட்டி ஒலி' சாந்தியின் மருமகளாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியின் நிஜ மருமகளாகவும் சந்தியா ஆகிறார். சாந்தியின் மகன் முரளிக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பெற்றவர்கள் முடிவு செய்த திருமணமாம். திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாமியாருக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.