அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
துரை செந்தில்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூரி 'கருடன்' என்கிற முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும் பல காரணங்களால் இதன் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. கடந்தவாரம் மே மாதம் ரிலீஸ் என அறிவித்தனர். இந்த நிலையில் இன்று கருடன் திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என புரொமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.