போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனிடையே படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றிற்றகான உரிமைகள் மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமைகளையும் விஜய்யின் முந்தைய படமான 'லியோ' படத்தை விடவும் அதிக விலைக்கு விற்கவே முயற்சித்து வருகிறார்களாம். இந்தப் படம் தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.




