நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனிடையே படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றிற்றகான உரிமைகள் மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமைகளையும் விஜய்யின் முந்தைய படமான 'லியோ' படத்தை விடவும் அதிக விலைக்கு விற்கவே முயற்சித்து வருகிறார்களாம். இந்தப் படம் தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.