பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அவற்றைப் பார்வையிட படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனிடையே படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது. ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றிற்றகான உரிமைகள் மிகப்பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
தியேட்டர் உரிமைகளையும் விஜய்யின் முந்தைய படமான 'லியோ' படத்தை விடவும் அதிக விலைக்கு விற்கவே முயற்சித்து வருகிறார்களாம். இந்தப் படம் தவிர இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். அதன்பிறகு தீவிர அரசியலில் இறங்கப் போகிறார். எனவே, இந்தப் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.