சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர். கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது.
நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள். ஒருவரது அறிவிப்பில் மற்றவர் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. மற்றபடி அந்த அறிவிப்பில் இருந்த வாக்கியங்கள் ஒன்றே.
ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிவிப்பில் கமெண்ட் பிரிவை ஆப் செய்துவிட்டிருந்தார். அதனால், அதில் யாரும் கமெண்ட் செய்ய முடியவில்லை. அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக யார் பிரிந்தாலும் பிரிவதற்கு முன்பாகவே இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், இருவருமே, இதுவரையிலும் அப்படி எதையும் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளத்தில் சைந்தவி தன்னுடைய பெயரில் இருக்கும் பிரகாஷ் என்பதையும் நீக்கவில்லை.
இருவரது பிரிவும் தற்காலிகமாக இருக்கட்டும். விரைவில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.