குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவலை மையமாக வைத்து இயக்குனர்கள் பாலா படம் இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல ரத்தினகுமார் எழுதிய கதையில் அதே பெயரில் படம் இயக்கப் போவதாக பாரதிராஜாவும் அறிவித்தார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனித் தனியே பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்தினார்கள்.
அந்த அளவுக்குப் போட்டி போட்டவர்கள் தற்போது வரையில் அந்தப் படத்தை இயக்கவேயில்லை. இதனிடையே, சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ், ராணா டகுபட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிக்க 'குற்றப்பரம்பரை' கதையை வெப் தொடராக இயக்க வேலைகள் ஆரம்பமாகின.
கடந்த வருடமே இத்தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாமகவில்லை. இத்தொடரை ஹாட்ஸ்டார் நிறவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சமீப காலங்களில் ஓடிடி தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இத்தொடரை நிறுத்திவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
திரைப்படமாக இரண்டு முறை, வெப் தொடராக ஒரு முறை என மொத்தம் மூன்று முறை 'குற்றப்பரம்பரை' டிராப் ஆகியுள்ளது. இனிமேலும், இதை யாராவது படமாகவே, தொடராகவோ தயாரிக்க முன் வருவார்களா என்பது சந்தேகமே.