8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா. இதன் முதல் பாகம் புஷ்பா : தி ரைஸ் என்கிற பெயரில் வெளியானது. இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா : தி ரூல் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீ வள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
முதல் பாகத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளது குறித்து சமீபத்தில் ராஷ்மிகா கூறும்போது, “முதல் பாகத்தில் நான் நடிக்கும்போது இதன் கதை, என் கதாபாத்திரம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல் தான் தயாரானேன். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ வள்ளி யார் என முழுமையாக புரிந்து கொண்டு நடித்து இருக்கிறேன். இந்த படம் வெளியாகும்போது இதில் என்னை ஸ்ரீவள்ளி 2.0 ஆக பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.