தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் |
ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக இருந்தவர் மோகன். அதிகமான படங்களில் பாடகராக நடித்ததால் 'மைக் மோகன்' என்று செல்லமாக அழைக்கப்பட்டார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடம்பிடித்து பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர் தற்போது 'ஹரா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். விஜய்ஸ்ரீ ஜி இயக்கி உள்ளார். யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார், பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் மோகன் பேசியதாவது: நான் எத்தனையோ படம் நடித்திருக்கலாம், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. 'ஹரா' தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன்.
என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியதுதான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால்தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும்தான் என் வெற்றிக்கு காரணம்.
நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். எனக்கு இந்த படத்தின் திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை இயக்குனர் மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை, ஆனால் மூன்று பாடல்களை இயக்குனர் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
இவ்வாறு மோகன் பேசினார்.