இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலமாக ரசிகர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் நிவின்பாலி. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து வந்தவர், சமீப காலமாக படங்களை சரியாக தேர்வு செய்யாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். தற்போது தமிழில் ராம் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழுமலை மற்றும் மலையாளத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வருஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் நிவின்பாலிக்கு நம்பிக்கை தரும் படங்களாக உருவாகி உள்ளன.
இதில் வருஷங்களுக்கு சேஷம் படத்தின் இயக்குனர் வினீத் சீனிவாசன் தான் முதன்முதலாக தான் இயக்கிய மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தின் மூலம் நிவின்பாலியை அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து அவரை வைத்து சில படங்களை இயக்கியும் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தங்களது நட்பை அடைகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி வருஷங்களுக்கு சேஷம் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவின்பாலிக்கு இந்த படம் ஒரு வெற்றிகரமான கம் பேக் ஆக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன்.