ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
கேரளாவில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் கிருஷ்ணகுமார். தமிழில் தெய்வத்திருமகள், மனிதன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நான்கு மகள்களில் ஒருவரான ஆஹானா கிருஷ்ணா என்பவர் மலையாளத்தில் நடிகையாக லூகா, பதினெட்டாம் படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரிகளில் ஒருவரான தியா கிருஷ்ணா திருவனந்தபுரத்தில் ஓ பை ஓஸி என்கிற நகைக்கடையை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றிய மூன்று பெண் ஊழியர்கள் கிட்டத்தட்ட 69 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உறவினர்களான இந்த மூன்று பெண் ஊழியர்களும் கடந்த வருடம் முதலே இந்த மோசடியை துவங்கியுள்ளனர். அதாவது கடையில் பில் போடும் போது உரிமையாளருக்கான மொபைல் போன் கியூ ஆர் கோடை மாற்றி தங்களில் ஒருவரின் க்யூ ஆர் கோடுக்கு ஸ்கேன் செய்து பணம் அவர்களது அக்கவுண்டுக்கு செல்லுமாறு மாற்றி அமைத்துள்ளனர். பல நாட்களாக நடந்து வந்த இந்த மோசடி சமீபத்தில் நடைபெற்ற ஆடிட்டிங்கின் போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அந்த ஊழியர்களை தியா கிருஷ்ணாவும் அவரது தந்தை கிருஷ்ணகுமாரும் விசாரித்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் தங்களை கடத்தியதாகவும் மிரட்டியதாகவும் கூறி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே சமயம் தியா கிருஷ்ணா தங்களிடம் உள்ள சிசி டிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டுள்ளதுடன் எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் அவர்களுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மூன்று ஊழியர்களும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினாலும் அவர்கள் செய்தது மிகப்பெரிய மோசடி என்பதால் காவல்துறை மூலமாகவே இந்த வழக்கை சந்திக்க தியா கிருஷ்ணாவும் அவரது தந்தை கிருஷ்ணகுமாரும் முடிவு செய்துள்ளனராம்.