என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் தக் லைப். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் திரைக்கு வந்ததில் இருந்து ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சோசியல் மீடியாவில் கடுமையான ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதோடு முதல் நாளில் இந்திய அளவில் இந்த தக்லைப் படம் 17 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் 7.15 கோடியாக குறைந்தது. அதையடுத்து மூன்றாவது நாள் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மூன்றாவது நாளில் தக்லைப் படம் தமிழ்நாட்டில் 6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் நேற்று மூன்றாவது நாளில் 7.50 கோடி வசூலித்து இருக்கிறது.
இப்படி விடுமுறை நாளிலும் தக்லைப் படத்தின் வசூல் அதிகரிக்காதது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்தார்கள். ஆனால் இப்போது படத்தின் வசூல் அதில் பாதியையாவது கூட எட்டிப் பிடிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.