2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.
இது தவிர நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். 2011ல் வெளியான 'உருமி' படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவாவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக கத்தனார் படக்குழு வெளியிட்டுள்ளது. உருமி படத்திலும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு இந்த ரீ என்ட்ரியிலும் கூட மீண்டும் அதேபோன்று இன்னொரு வரலாற்று கதாபாத்திரம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.