'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் படம் கத்தனார். இந்த படத்தில் ஜெயசூர்யா ஒரு துறவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இதில் இரண்டு ஆச்சரிய விஷயங்கள் என்னவென்றால் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாளத் திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை அனுஷ்கா. யட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.
இது தவிர நடிகர் பிரபுதேவா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். 2011ல் வெளியான 'உருமி' படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபுதேவா. இந்த நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவாவின் கதாபாத்திர போஸ்டர் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக கத்தனார் படக்குழு வெளியிட்டுள்ளது. உருமி படத்திலும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த பிரபுதேவாவிற்கு இந்த ரீ என்ட்ரியிலும் கூட மீண்டும் அதேபோன்று இன்னொரு வரலாற்று கதாபாத்திரம் கிடைத்திருப்பது ஆச்சரியம் தான்.




