சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அஜித். இல்லையென்றால் விடாமுயற்சி படப்பிடிப்பில் இன்னும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.