இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர் ரோகித் என்பருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரோகித் போக்சோ வழக்கில் சிக்கியதால் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
தற்போது ஐஸ்வர்யாவை தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கு மணமுடித்து கொடுக்கிறார் ஷங்கர். தற்போது இந்த திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு ஷங்கர் தனது மனைவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். இந்த திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.