மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சித் தலைவர்கள் சிலைகளை மூடி வைக்கவும், பேனர்கள், சுவரொட்டிகளை உள்ளிட்டவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு எண்ணூர் விரைவு சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. அப்போது இந்தியன் தாத்தாவை அங்குள்ள மக்கள் கொண்டாடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக அவர்கள் தங்கள் அடுக்குமாடியின் சுவர்களில் இந்தியன் தாத்தாவின் படத்தை பெரிய அளவில் வரைந்து வைத்திருப்பதாக காட்சிகள் படமானது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் அந்த ஓவியங்கள் அப்படியே இருக்கிறது. அங்குள்ள மக்களும் அது தங்கள் குடியிருப்புக்கு தனி அடையாளம் தருவதால் அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஓவியங்களை அரசியல் ரீதியாக எடுத்துக் கொள்வதா அல்லது சினிமாவாக எடுத்துக் கொள்வதாக என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறதாம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்களாம்.
சுவர்களில் வரையப்பட்டிருப்பது கமல்ஹாசனின் நேரடி உருவம் அல்ல. அவர் நடிக்கும் கேரக்டரின் உருவம்தான் அதனால் அதை அழிக்க வேண்டிய அவசியம் வராது என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்தியன் தாத்தா தேர்தல் அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளார்.