ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா | மறுவெளியீட்டுக்காக 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட 'ஆட்டோகிராப்' |
பார்லிமென்ட் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சித் தலைவர்கள் சிலைகளை மூடி வைக்கவும், பேனர்கள், சுவரொட்டிகளை உள்ளிட்டவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு எண்ணூர் விரைவு சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. அப்போது இந்தியன் தாத்தாவை அங்குள்ள மக்கள் கொண்டாடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக அவர்கள் தங்கள் அடுக்குமாடியின் சுவர்களில் இந்தியன் தாத்தாவின் படத்தை பெரிய அளவில் வரைந்து வைத்திருப்பதாக காட்சிகள் படமானது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் அந்த ஓவியங்கள் அப்படியே இருக்கிறது. அங்குள்ள மக்களும் அது தங்கள் குடியிருப்புக்கு தனி அடையாளம் தருவதால் அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில் இந்த ஓவியங்களை அரசியல் ரீதியாக எடுத்துக் கொள்வதா அல்லது சினிமாவாக எடுத்துக் கொள்வதாக என்பது குறித்து அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறதாம். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்களாம்.
சுவர்களில் வரையப்பட்டிருப்பது கமல்ஹாசனின் நேரடி உருவம் அல்ல. அவர் நடிக்கும் கேரக்டரின் உருவம்தான் அதனால் அதை அழிக்க வேண்டிய அவசியம் வராது என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்தியன் தாத்தா தேர்தல் அதிகாரிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி உள்ளார்.