கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
சினி
கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் எழுதிய இயக்கியுள்ள படம்
‛ஒத்த ஓட்டு முத்தையா'. கதையின் நாயகனாக காமெடி நடிகர் கவுண்டமணி
நடித்துள்ளார். முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில்
உள்ள பரணி டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங்
பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய
பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக
பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். கவுண்டமணி ஜோடியாக
ராஜேஸ்வரி என்பவர் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சாய்
ராஜகோபால் கூறியதாவது: ‛‛'ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி
அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே
சம்மதம் தெரிவித்தார். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான
கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் வரும் காட்சிகள்
அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும். கவுண்டமணி-செந்தில்
நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும்
பேசப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.