தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
சினி
கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் எழுதிய இயக்கியுள்ள படம்
‛ஒத்த ஓட்டு முத்தையா'. கதையின் நாயகனாக காமெடி நடிகர் கவுண்டமணி
நடித்துள்ளார். முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில்
உள்ள பரணி டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங்
பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய
பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக
பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். கவுண்டமணி ஜோடியாக
ராஜேஸ்வரி என்பவர் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சாய்
ராஜகோபால் கூறியதாவது: ‛‛'ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி
அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே
சம்மதம் தெரிவித்தார். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான
கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் வரும் காட்சிகள்
அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும். கவுண்டமணி-செந்தில்
நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும்
பேசப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.