நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் வெளிச்சம் பெற்ற ஏகன், அதன்பிறகு 'ஜோ' என்கிற படத்தில் ஒரு அறிமுக நடிகராக வெளிப்பட்டார். அதை தொடர்ந்து தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை பட வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பை பார்த்த யோகிபாபு, இவரை தனது கேரவனுக்குள் அழைத்து, “நன்றாக நடிக்கிறாய். அப்படியே அதை தக்க வைத்துக்கொள். அது மட்டுமல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. பணத்தின் பின் போகாதே” என்று ஓர் அறிவுரையும் கூறியுள்ளார். இதனை ஏகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.