சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் வெளிச்சம் பெற்ற ஏகன், அதன்பிறகு 'ஜோ' என்கிற படத்தில் ஒரு அறிமுக நடிகராக வெளிப்பட்டார். அதை தொடர்ந்து தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை பட வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பை பார்த்த யோகிபாபு, இவரை தனது கேரவனுக்குள் அழைத்து, “நன்றாக நடிக்கிறாய். அப்படியே அதை தக்க வைத்துக்கொள். அது மட்டுமல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. பணத்தின் பின் போகாதே” என்று ஓர் அறிவுரையும் கூறியுள்ளார். இதனை ஏகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.