ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் வெளிச்சம் பெற்ற ஏகன், அதன்பிறகு 'ஜோ' என்கிற படத்தில் ஒரு அறிமுக நடிகராக வெளிப்பட்டார். அதை தொடர்ந்து தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை பட வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பை பார்த்த யோகிபாபு, இவரை தனது கேரவனுக்குள் அழைத்து, “நன்றாக நடிக்கிறாய். அப்படியே அதை தக்க வைத்துக்கொள். அது மட்டுமல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. பணத்தின் பின் போகாதே” என்று ஓர் அறிவுரையும் கூறியுள்ளார். இதனை ஏகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.