புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியான ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவை ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதனால் நன்றாக ஓடும் படங்கள் கூட, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படி ஓடிடியில் வெளியாவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மலையாள தயாரிப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டு உள்ளனர்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் பலரும் ஒப்பந்தத்தை மீறி முன்கூட்டியே தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வரும் பிப்., 22 முதல் கேரளா திரையரங்குகளில் மலையாள படங்களை திரையிட மாட்டோம் என முடிவெடுத்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் இது மற்ற மொழி படங்களையும், இதற்குமுன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படங்களையும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.