ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியான ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவை ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதனால் நன்றாக ஓடும் படங்கள் கூட, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படி ஓடிடியில் வெளியாவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மலையாள தயாரிப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டு உள்ளனர்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் பலரும் ஒப்பந்தத்தை மீறி முன்கூட்டியே தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வரும் பிப்., 22 முதல் கேரளா திரையரங்குகளில் மலையாள படங்களை திரையிட மாட்டோம் என முடிவெடுத்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் இது மற்ற மொழி படங்களையும், இதற்குமுன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படங்களையும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.