பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென மறைந்தார். இலங்கையில் காலமான அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினரின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜா குடும்பத்தில் உள்ள பெரியப்பா, சித்தப்பா மகன்கள், மகள்கள் அனைவருமே திரையுலகத்தில் உள்ளார்கள். நெருக்கமான பாசத்தில் இருந்தவர்கள். பவதாரிணியின் மறைவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பவதாரிணியின் சித்தப்பா கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு, பவதாரிணியின் பெரியப்பா மகள் காஸ்ட்டியூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பவதாரிணியின் இழப்பு பற்றி அப்போதே அவர்களது கடும் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இன்று பவதாரிணியின் பிறந்தநாள். அவரை நினைவு கூர்ந்து வெங்கட் பிரபு, “என் தங்கை பவதாரிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ நல்லதொரு இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பாய் என எங்களுக்குத் தெரியும்,” என இதயம் நொறுங்கிய எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார்.