'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான படம் 'அயலான்'. இப்படத்தையும் 'கேப்டன் மில்லர்' படத்தையும் ஒரே நாளில் தெலுங்கில் வெளியிட அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால், இரண்டு படங்களின் வெளியீடும் ஜனவரி 26க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 'கேப்டன் மில்லர்' படம் மட்டும் வெளியானது. ஆனால், 'அயலான்' படம் வெளியாகவில்லை.
படத்திற்கு 'டிஐ' தொழில்நுட்பம் செய்து தந்த ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்கு 'அயலான்' தயாரிப்பாளர் முழு தொகையையும் தராமல் பாக்கி வைத்ததால்தான் அவர்கள் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்காக நீதிமன்றத் தடை வாங்கியதாகத் தகவல் வெளியானது.
கடந்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், தெலுங்கு பதிப்பு ஓடிடியிலும் வெளியாகவில்லை. தியேட்டர் வெளியீடு பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரையில் இல்லை. தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
தெலுங்கு வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் வெளியீட்டிற்காகவும், அதன் வரவேற்புக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “எங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தை அரவணைப்புடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அயலான் - இதயங்களை வென்றவன்,” என 'நன்றி கார்டு' போட்டு முடித்துவிட்டார்கள்.