அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான படம் 'அயலான்'. இப்படத்தையும் 'கேப்டன் மில்லர்' படத்தையும் ஒரே நாளில் தெலுங்கில் வெளியிட அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால், இரண்டு படங்களின் வெளியீடும் ஜனவரி 26க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 'கேப்டன் மில்லர்' படம் மட்டும் வெளியானது. ஆனால், 'அயலான்' படம் வெளியாகவில்லை.
படத்திற்கு 'டிஐ' தொழில்நுட்பம் செய்து தந்த ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்கு 'அயலான்' தயாரிப்பாளர் முழு தொகையையும் தராமல் பாக்கி வைத்ததால்தான் அவர்கள் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்காக நீதிமன்றத் தடை வாங்கியதாகத் தகவல் வெளியானது.
கடந்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், தெலுங்கு பதிப்பு ஓடிடியிலும் வெளியாகவில்லை. தியேட்டர் வெளியீடு பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரையில் இல்லை. தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
தெலுங்கு வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் வெளியீட்டிற்காகவும், அதன் வரவேற்புக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “எங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தை அரவணைப்புடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அயலான் - இதயங்களை வென்றவன்,” என 'நன்றி கார்டு' போட்டு முடித்துவிட்டார்கள்.