நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

நடிகர் விஷால் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட களம் இறங்கினார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவரால் போட்டியிட முடியவில்லை. விரைவில் அரசியல் கட்சி தொடங்க போவதாக செய்தி வந்தது. ‛‛காலம் தான் முடிவு செய்யும். தேவைப்பட்டால் மக்களுக்காக குரல் கொடுப்பேன்'' என அறிக்கை வெளியிட்டார் விஷால்.
இந்த நிலையில் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கூறுகையில், விஷாலுக்கு சிறிய வயதில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டு. தன்னிடத்தில் பணம் இல்லை என்ற போதும் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்வார். தற்போது தனது தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி செய்கிறார். தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் உள்ளார். கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வருவார். அரசியலில் ஜெயித்து காட்டுவார். அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய், அஜித், சூர்யா போன்று நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும். அதன்பிறகு, தான் சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் எனது ஆசை'' என்றார்.