'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

கொடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சரத்குமார், உன்னி முகுந்தனை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது புதிய படம் விரைவில் ஆரம்பமாகும் என்று சோசியல் மீடியாவில் சரவணன் செய்தி வெளியிட்ட போதும், அந்த படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது சரவணன் படம் பற்றி துரை செந்தில் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சரவணனுக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். அப்போது அந்த படம் குறித்து நான் ஒரு புதிய ஐடியாவை சொன்னேன். அந்த ஐடியாவும் அவருக்கு பிடித்ததை அடுத்து அது குறித்த சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.




