7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கொடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சரத்குமார், உன்னி முகுந்தனை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது புதிய படம் விரைவில் ஆரம்பமாகும் என்று சோசியல் மீடியாவில் சரவணன் செய்தி வெளியிட்ட போதும், அந்த படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது சரவணன் படம் பற்றி துரை செந்தில் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சரவணனுக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். அப்போது அந்த படம் குறித்து நான் ஒரு புதிய ஐடியாவை சொன்னேன். அந்த ஐடியாவும் அவருக்கு பிடித்ததை அடுத்து அது குறித்த சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.