சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கொடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சரத்குமார், உன்னி முகுந்தனை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது புதிய படம் விரைவில் ஆரம்பமாகும் என்று சோசியல் மீடியாவில் சரவணன் செய்தி வெளியிட்ட போதும், அந்த படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது சரவணன் படம் பற்றி துரை செந்தில் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சரவணனுக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். அப்போது அந்த படம் குறித்து நான் ஒரு புதிய ஐடியாவை சொன்னேன். அந்த ஐடியாவும் அவருக்கு பிடித்ததை அடுத்து அது குறித்த சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.