9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய மேலாளர் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் நேற்று நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டவர், நான் வெளியிட்ட அந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிப்பது ஒரு கீழ்த்தரமான செயல் என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு கடந்த 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப்படி, சோசியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பினால் மூன்றாண்டு சிறை தண்டனையும், மீண்டும் அதே தவறை செய்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதோடு அவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பிய நடிகை பூனம் பாண்டேவுக்கு மூன்று சிறை தண்டனை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.