'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை எடுத்து வைத்துள்ளார் விஜய். அதனால், அவரது ரசிகர்கள் இதற்கு மேல் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களுடன் சண்டை போட வாய்ப்பில்லை. 'கோட், விஜய் 69' ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் ரசிகர்களின் சினிமா சண்டை முடிவுக்கு வந்துவிடும். இனி, “சூப்பர் ஸ்டார்” பட்டம், “யார் அதிக வசூல் ” என்றெல்லாம் அவர்கள் பேச முடியாது.
அரசியல் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே ஸ்ட்ரெயிட்டாக '2026ல் அடுத்த சிஎம்' என 'சூப்பர் ஸ்டார்' சண்டையை விட்டுவிட்டு 'சீப் மினிஸ்டர்' சண்டைக்குப் போய்விடுவார்கள். அதை ஆரம்பித்தும் விட்டார்கள்.