வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே | 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார் | மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் |

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை எடுத்து வைத்துள்ளார் விஜய். அதனால், அவரது ரசிகர்கள் இதற்கு மேல் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களுடன் சண்டை போட வாய்ப்பில்லை. 'கோட், விஜய் 69' ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் ரசிகர்களின் சினிமா சண்டை முடிவுக்கு வந்துவிடும். இனி, “சூப்பர் ஸ்டார்” பட்டம், “யார் அதிக வசூல் ” என்றெல்லாம் அவர்கள் பேச முடியாது.
அரசியல் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே ஸ்ட்ரெயிட்டாக '2026ல் அடுத்த சிஎம்' என 'சூப்பர் ஸ்டார்' சண்டையை விட்டுவிட்டு 'சீப் மினிஸ்டர்' சண்டைக்குப் போய்விடுவார்கள். அதை ஆரம்பித்தும் விட்டார்கள்.