என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை எடுத்து வைத்துள்ளார் விஜய். அதனால், அவரது ரசிகர்கள் இதற்கு மேல் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களுடன் சண்டை போட வாய்ப்பில்லை. 'கோட், விஜய் 69' ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் ரசிகர்களின் சினிமா சண்டை முடிவுக்கு வந்துவிடும். இனி, “சூப்பர் ஸ்டார்” பட்டம், “யார் அதிக வசூல் ” என்றெல்லாம் அவர்கள் பேச முடியாது.
அரசியல் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே ஸ்ட்ரெயிட்டாக '2026ல் அடுத்த சிஎம்' என 'சூப்பர் ஸ்டார்' சண்டையை விட்டுவிட்டு 'சீப் மினிஸ்டர்' சண்டைக்குப் போய்விடுவார்கள். அதை ஆரம்பித்தும் விட்டார்கள்.