தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் சக்திகள் இருப்பதாகவும் திராவிட அரசியல் பேசுவோர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதுகுறித்து பதிலளித்துள்ள பாலா, 'நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாக விமர்சனம் வைக்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமாம் இருக்கிறார்கள். என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் எனக்கு பின்னால் இருப்பதால் தான் நான் இந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார்.