'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த படம் அவர்களும் இவர்களும். இந்த படத்தை வீரபாண்டியன் என்பவர் இயக்கியிருந்தார். வீரபாண்டியன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு கொண்டு வந்ததே நான் தான். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்த பேட்டியிலும் கூறுவதில்லை. அதோடு தற்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டதால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் பணத்திற்கு கஷ்டப்பட்டபோது ஆட்டோவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்றும், சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் வீரபாண்டியன். அவர் சொன்ன இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நேரடியாக வீரபாண்டியனை கூறாமல், மறைமுகமாக, ‛‛நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வது வாழ்க்கையும் உறவினையும் கெடுத்துவிடும். யாராக இருந்தாலும் மொத்த கதை என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே சரியானதாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.