என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'அயலான்' படம் தெலுங்கில் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டச் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலையிலாவது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதுவும் நடக்காமல் பட வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.
படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தெலுங்கில் படத்தை வெளியிடும் நிறுவனமும் எதுவுமே சொல்லவில்லை. பொங்கலுக்கு படத்தை தெலுங்கில் வெளியிடாமல் சிலர் தடுத்ததற்கு பொங்கி எழுந்த வினியோக நிறுவனம் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதே சமயம் நேற்று வெளியாகாமல் போனதற்கு எதுவுமே சொல்லாமல் போனது தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அடுத்த வாரம் பல தெலுங்குப் படங்கள் வெளிவர உள்ளதாம். அதற்கடுத்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ்ப் பதிப்பு ஓடிடியில் வெளிவந்துவிடும். எனவே, அடுத்த வாரம் தெலுங்கில் படம் வெளியானாலும் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். நேற்றைய வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த வார விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள் 'அயலான்' குழுவினர்.