மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வட மாநிலங்களில் இருந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது, உணவு விவகாரம் தான். வட மாநிலங்களில், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கமான நடிகைகள், இங்கு வந்ததும்,இட்லியையும்,தோசையையும் சாப்பிட வேண்டியிருக்கும். பெரும்பாலான நடிகைகளுக்கு, இட்லி, தோசையின் சுவை, ஒத்து வருவது இல்லை. ஆனால், கோடம்பாக்கம், பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு இந்த பிரச்னையே இல்லை. ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தாயாரும், "நீ, தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டிய பெண் என்பார். எனக்கும், இட்லிக்கும் உள்ள தொடர்பு, இப்போது ஏற்பட்டதல்ல, அது, என், பள்ளி பருவ காலத்திலேயே ஏற்பட்டது என்கிறார், ஹன்சிகா.