'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய மகள் சனா, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியவர், தற்போது ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சனா இயக்கும் முதல் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்த சந்தோஷ் என்பவர் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி.,யின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.