ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? | 5 மொழிகளில் வெளியான ஆனந்தியின் வெப் சீரிஸ் |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் என்கிற இரட்டையர்கள் காமெடி மிகப்பெரிய அளவில் எண்பது 90களில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அதன்பிறகு அப்படி ஒரு இரட்டையர் கூட்டணியை அடுத்து வந்த நகைச்சுவை நடிகர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அதே சமயம் கதாநாயகனாக நடித்து வந்த பார்த்திபனும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் பாரதி கண்ணம்மா படத்தில் முதன் முதலாக இணைந்து அதேபோன்ற ஒரு இரட்டையர் காமெடி கூட்டணியை உருவாக்கினர்.
பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள் தான் இவர்களது காமெடியின் அடிநாதம். இதைத்தொடர்ந்து வந்த வெற்றி கொடி கட்டு, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் ஒரு காலகட்டத்தில் வடிவேலு சோலோ காமெடியனாகவும் கதாநாயகனாகவும் வளர்ந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மீண்டும் தங்களது கூட்டணி இணைவதற்கான வாய்ப்பு விரைவில் இருக்கலாம் என்று சூசகமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், அங்கே வடிவேலுவுடன் இணைந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,"நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்! இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்.." என்று கூறியுள்ளார்.