இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே 1ம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 4ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
என்றாலும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு படப்பிடிப்பை துரிதமாக நடத்தி வருகிறார்களாம். அதோடு, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. பிப்ரவரி மாதம் வரை அஜித்குமார் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் மீதமுள்ள காட்சிகளை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் படமாக்கி முடித்து விட வேண்டும் என்பதால் முன்பை விட தற்போது இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளாராம் மகிழ்திருமேனி.