'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‛விடாமுயற்சி'. நாயகியாக திரிஷா நடிக்கிறார். பிரியா பவானி சங்கர், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக் ஷன் கதையில் தயாராகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்தை நடிகை பாவனா சந்தித்து பேசி உள்ளார். கன்னட படம் ஒன்றுக்காக பாவனா உட்பட அவரது குழுவினர் அஜர்பைஜான் நாட்டில் தான் முகாமிட்டுள்ளனர். அப்போது ஓட்டலில் பாவனா உள்ளிட்ட குழுவினர் அஜித்தை சந்தித்து பேசினர். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வலைதளத்தில் வைரலானது.
சரண் இயக்கத்தில் அஜித் நடித்த ‛அசல்' படத்தில் பாவனாவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.