முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
இரண்டாவது இன்னிங்சில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு தற்போது தமிழில்தான் பெரிய படங்கள் உள்ளன என்றால், மலையாளத்தில் மம்மூட்டியுடனும், தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் தலா ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் எல்லாம் அவருக்கும் கதையில் முக்கிய பங்கு உள்ளதாம். முன்பெல்லாம் நயன்தாரா என்றாலே கவர்ச்சிக்கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து வந்த சினிமா உலகம், இப்போது அவரை பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம் நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற படம் கொடுத்த பெயர்தான். அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தரமான கேரக்டர்களாக பார்த்து செலக்ட் பண்ணி வருகிறார் நயன்.
மேலும், காஜல்அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் போன்று இப்போதும் நயன்தாராவுக்கு பீல்டில் மவுசு இருக்கிறது. அதனால் அவரது படக்கூலியும் ஒரு கோடிக்கு மேல் எகிறி நிற்கிறது. மலையாளத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் இருக்கிற மார்க்கெட்டை புரிந்து கொண்டு அங்கு தரும் சம்பளத்தில் அதிகப்படியாகவே கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தனக்கு தமிழைப்போலவே மற்ற மொழிகளிலும் இருக்கிற வரவேற்பை பார்த்த நயன்தாரா, முன்னணி நடிகர், இயக்குனர்களின் படங்களுக்கு கூடுதல் முக்கியத்தும் கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.