நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மாறி மாறி பிஸியான நடிகராக நடித்து வருகிறார். கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் கொண்டவராக முதலிடத்தில் இருக்கிறார். இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் இன்று டிசம்பர் 21ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள நேர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் முழுவதும் தனது ரசிகர்களுக்காக ஒதுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் மோகன்லால்.
அனைத்து கேரள மோகன்லால் ரசிகர்கள் மற்றும் கலை நற்பணி குழுவின் 25வது வருட விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் தான் மோகன்லால் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. கொச்சியில் உள்ள நெடும்பசேரி என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு மோகன்லாலுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய மோகன்லால், ரசிகர்களை தான் தாமதமாக சந்திப்பதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.