போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
பாகுபலி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட்டார். தென்னிந்தியாவுக்கு சமமாக பாலிவுட்டிலும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் அவர் எப்போதும் போல அதே எளிமையுடன் தான் சக நட்சத்திரங்களை அணுகுகிறார் என்றும் விருந்தோம்பலில் எல்லோரையும் அசத்தி விடுகிறார் என்றும் அவ்வப்போது பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பிரபாஸிடம் உள்ள உங்களை ஸ்தம்பிக்க வைக்கும் குணாதிசயம் எது என்று பிரித்திவிராஜிடம் கேட்டபோது அவருடைய விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார். ஒருமுறை பிரித்விராஜ் எனது குடும்பத்திற்கு ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது எங்களுக்காக அவர் வரவழைத்த உணவு வகைகளை அடுக்கி வைக்கவே ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. என்னுடைய 7 வயது மகள் கூட பிரபாஸை பார்த்து எங்கள் மூவருக்கே இவ்வளவு என்றால் எங்களுடன் எங்களது மாமா அத்தைகள் கூட வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவுக்கு பிரபாஸ் நம்மை திக்குமுக்காட வைத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.