பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பாகுபலி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட்டார். தென்னிந்தியாவுக்கு சமமாக பாலிவுட்டிலும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் அவர் எப்போதும் போல அதே எளிமையுடன் தான் சக நட்சத்திரங்களை அணுகுகிறார் என்றும் விருந்தோம்பலில் எல்லோரையும் அசத்தி விடுகிறார் என்றும் அவ்வப்போது பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பிரபாஸிடம் உள்ள உங்களை ஸ்தம்பிக்க வைக்கும் குணாதிசயம் எது என்று பிரித்திவிராஜிடம் கேட்டபோது அவருடைய விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார். ஒருமுறை பிரித்விராஜ் எனது குடும்பத்திற்கு ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது எங்களுக்காக அவர் வரவழைத்த உணவு வகைகளை அடுக்கி வைக்கவே ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. என்னுடைய 7 வயது மகள் கூட பிரபாஸை பார்த்து எங்கள் மூவருக்கே இவ்வளவு என்றால் எங்களுடன் எங்களது மாமா அத்தைகள் கூட வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவுக்கு பிரபாஸ் நம்மை திக்குமுக்காட வைத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.