மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாகுபலி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட்டார். தென்னிந்தியாவுக்கு சமமாக பாலிவுட்டிலும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் அவர் எப்போதும் போல அதே எளிமையுடன் தான் சக நட்சத்திரங்களை அணுகுகிறார் என்றும் விருந்தோம்பலில் எல்லோரையும் அசத்தி விடுகிறார் என்றும் அவ்வப்போது பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பிரபாஸிடம் உள்ள உங்களை ஸ்தம்பிக்க வைக்கும் குணாதிசயம் எது என்று பிரித்திவிராஜிடம் கேட்டபோது அவருடைய விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார். ஒருமுறை பிரித்விராஜ் எனது குடும்பத்திற்கு ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது எங்களுக்காக அவர் வரவழைத்த உணவு வகைகளை அடுக்கி வைக்கவே ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. என்னுடைய 7 வயது மகள் கூட பிரபாஸை பார்த்து எங்கள் மூவருக்கே இவ்வளவு என்றால் எங்களுடன் எங்களது மாமா அத்தைகள் கூட வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவுக்கு பிரபாஸ் நம்மை திக்குமுக்காட வைத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.