ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நடைபெற இருக்கும் 96வது ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்துகொள்ள இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '2018' என்கிற படம் அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. இந்த படம் நிச்சயம் ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப்பட்டியலில் இருந்து வெளியேறி ஆஸ்கர் விருது பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. இது மலையாள ரசிகர்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் அமைந்துள்ளது.
2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும் அதில் நடைபெற்ற மீட்பு பணிகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் வெறும் கலைப்படமாக மட்டுமல்லாமல் கமர்சியல் படமாகவும் அமைந்து கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. மலையாளத் திரையில் இருந்து ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள தேர்வான நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.