மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் பாலாவின், "சேது படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் மறு வாழ்வு பெற்றவர், நடிகர் விக்ரம். சேதுவுக்கு முன்பே, பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், இந்த படம் தான், அவரின் நடிப்பு திறமையை, தமிழ் திரையுலகிற்கு நிரூபித்தது. இதனால், பாலாவின் மீது, மதிப்பும், அன்பும் வைத்துள்ளார், விக்ரம்.சமீபத்தில், "பரதேசி படத்தை தியேட்டரில் பார்த்த, விக்ரம், அதிகம் உணர்ச்சி வசப்பட்டாராம். தியேட்டரிலிருந்து நேரடியாக, பாலாவின் வீட்டுக்கு சென்று, தன் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டார்.இதன்பின், இருவரும், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பற்றி, விரிவாக, விவாதித்து, அலசி, ஆராய்ந்தனராம். நீண்ட நேரத்துக்கு பின், வீட்டுக்கு கிளம்பிய, விக்ரம், "நீங்கள், எப்போது விரும்பினாலும், உங்கள் படத்தில் நடிப்பதற்கு, தயாராக இருக்கிறேன். உங்களின் அழைப்புக்காக காத்திருக்கிறேன் என, பாலாவிடம் கூறி, விடை பெற்றுள்ளார். இதனால், பாலாவின் அடுத்த படத்தில், விக்ரம் நடிக்க கூடும் என, கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.