லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படம் நாளை மறுநாள் டிசம்பர் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய அரசுகள் அறிவித்தன.
தெலங்கானாவில் இதுவரை இல்லாத அளவிற்கு டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு முதல் நாள் வசூலாக பெரும் தொகை வசூலாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட 'சலார்' படத்திற்கான கட்டண உயர்வு அதிகம் என்பதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் சற்றே உயர்த்தப்பட்டிருந்தாலும் அங்கும் முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி என்பதால் தெலுங்கில் முதல் நாளில் 'சலார்' வசூல் சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியிலும் படத்திற்கு இது போன்ற வரவேற்பு கிடைத்தால் இந்திய அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது.