பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் போட்டி போட்டு தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் விஜயகாந்த். அரசியலும் இறங்கி தனி கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இன்று(டிச., 14) அவரது கட்சியான தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உட்கார கூட முடியாத சூழலில் இருக்கும் விஜயகாந்த்தை நாற்காலியில் அமர வைத்து கூட்டத்தை நடத்தினார்கள். சரியாக உட்கார முடியாமல் சாய்ந்து விழப் போன விஜயகாந்தை இருவர் உடனே தாங்கிப்பிடிப்பதற்காக பின்புறமே நின்றிருந்தனர்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விஜயகாந்த் மீது பரிதாபத்தை வரவழைத்திருக்கிறது. இப்படியெல்லாம் அவரைத் துன்புறுத்த வேண்டாமென பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திரைப்பட இயக்குனரான பாண்டிராஜும் அவரது கவலையையும், கோரிக்கையையும் பகிர்ந்துள்ளார். “கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்... பிடித்த ஒரு 'நல்ல மனிதரை ' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு,” எனப் பதிவிட்டுள்ளார்.