நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
ஒரே ஆண்டில் இரண்டு 500 கோடி ஹிந்திப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய இயக்குனர்கள் இருவர் சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒருவர், 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, மற்றொருவர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா.
ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் இதுவரையிலும் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதனால், இன்னும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் தென்னிந்திய இயக்குனர்கள் மிகப் பெரும் வசூல் சாதனைகளைப் புரிந்தது கிடையாது. ஆனால், இப்போது நேரடி ஹிந்திப் படங்களை இயக்கி பெரிய வசூல் சாதனை செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.