அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் |
நடிகை சமந்தா இந்த வருடத்திலேயே இரண்டு படங்கள் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவிட்டு அடுத்ததாக செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மீதி நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் சமந்தா.
அன்று விளையாட்டு தினம் என்பதால் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி விளையாட செய்தார். குழந்தைகளும் பதிலுக்கு சமந்தாவிற்கு தங்கள் அன்பையும் வரவேற்பையும் தெரிவித்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து சமந்தா கூறும்போது, 'ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியர்.. இந்த உலகத்தையே மாற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.