புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகை சமந்தா இந்த வருடத்திலேயே இரண்டு படங்கள் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவிட்டு அடுத்ததாக செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மீதி நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் சமந்தா.
அன்று விளையாட்டு தினம் என்பதால் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி விளையாட செய்தார். குழந்தைகளும் பதிலுக்கு சமந்தாவிற்கு தங்கள் அன்பையும் வரவேற்பையும் தெரிவித்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து சமந்தா கூறும்போது, 'ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியர்.. இந்த உலகத்தையே மாற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.