அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.