‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.