அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
தமிழில் 'மூனே மூணு வார்த்தை, கவண்' போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷனா ராஜேந்திரன். தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேப்போல் கனா, துணிவு போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷன்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் கூறும்போது, “ பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். தர்மபுரி பகுதியில் நடந்து வரும் சாதிய அரசியல்தான் கதைக்களம். நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இயல்பான நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்காகவே தர்ஷனா ராஜேந்திரனை தேர்வு செய்தோம்" என்றார்.