அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

பிரபல சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வந்த இருவரும் ஒருக்கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் தினேஷ் உருகி உருகி ரச்சிதாவிற்காக குரல் கொடுக்க, ரச்சிதாவோ தினேஷுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பேயில்லை என்றவாறு பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் தகவல் உலா வருகிறது. அதாவது நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தினேஷ் நாச்சியார்புரம் என்ற சீரியலை தயாரித்தார். இதற்காக அவர் பெரிய தொகையை கடனாகவும் வாங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாச்சியார்புரம் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடனில் சிக்கித் தவித்த தினேஷ் மீது வழக்குகள் பாய்ந்தது. அதில் தினேஷின் மனைவி ரச்சிதாவின் பெயரையும் இணைத்துவிட்டனர். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் தான் ரச்சிதா தினேஷுடன் சண்டைபோட்டு பிரிந்துள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களிலில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.