அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரபல நடிகரான அபிஷேக் சங்கர் சினிமா மற்றும் சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கோலங்கள் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது நிஜ வாழ்வின் நடந்த சுவாரசியமான காதல் கதை குறித்து கூறியுள்ளார்.
மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர் அன்றைய காலக்கட்டத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் தினக்கூலி வேலை பார்த்து வந்தாராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் இருந்த அவர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சம்பளம் வாங்கியவுடன் தேவி தியட்டேரில் படம் பார்த்துவிட்டு மீதமிருக்கும் 47 ரூபாய் மற்றும் சில்லரையை சேர்த்து வைத்துக் கொள்வாராம்.
அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண். அவர் மும்பையில் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசவே சேர்த்து வைத்திருந்த காசையெல்லாம் அபிஷேக் செலவு செய்துவிடுவாராம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே அவர் காத்திருப்பாராம்.