ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

பிரபல நடிகரான அபிஷேக் சங்கர் சினிமா மற்றும் சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கோலங்கள் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது நிஜ வாழ்வின் நடந்த சுவாரசியமான காதல் கதை குறித்து கூறியுள்ளார்.
மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர் அன்றைய காலக்கட்டத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் தினக்கூலி வேலை பார்த்து வந்தாராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் இருந்த அவர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சம்பளம் வாங்கியவுடன் தேவி தியட்டேரில் படம் பார்த்துவிட்டு மீதமிருக்கும் 47 ரூபாய் மற்றும் சில்லரையை சேர்த்து வைத்துக் கொள்வாராம்.
அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண். அவர் மும்பையில் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசவே சேர்த்து வைத்திருந்த காசையெல்லாம் அபிஷேக் செலவு செய்துவிடுவாராம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே அவர் காத்திருப்பாராம்.