மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு |
பிரபல நடிகரான அபிஷேக் சங்கர் சினிமா மற்றும் சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கோலங்கள் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது நிஜ வாழ்வின் நடந்த சுவாரசியமான காதல் கதை குறித்து கூறியுள்ளார்.
மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர் அன்றைய காலக்கட்டத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் தினக்கூலி வேலை பார்த்து வந்தாராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் இருந்த அவர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சம்பளம் வாங்கியவுடன் தேவி தியட்டேரில் படம் பார்த்துவிட்டு மீதமிருக்கும் 47 ரூபாய் மற்றும் சில்லரையை சேர்த்து வைத்துக் கொள்வாராம்.
அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண். அவர் மும்பையில் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசவே சேர்த்து வைத்திருந்த காசையெல்லாம் அபிஷேக் செலவு செய்துவிடுவாராம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே அவர் காத்திருப்பாராம்.