29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? |

பிரபல சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வந்த இருவரும் ஒருக்கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் தினேஷ் உருகி உருகி ரச்சிதாவிற்காக குரல் கொடுக்க, ரச்சிதாவோ தினேஷுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பேயில்லை என்றவாறு பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் தகவல் உலா வருகிறது. அதாவது நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தினேஷ் நாச்சியார்புரம் என்ற சீரியலை தயாரித்தார். இதற்காக அவர் பெரிய தொகையை கடனாகவும் வாங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாச்சியார்புரம் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடனில் சிக்கித் தவித்த தினேஷ் மீது வழக்குகள் பாய்ந்தது. அதில் தினேஷின் மனைவி ரச்சிதாவின் பெயரையும் இணைத்துவிட்டனர். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் தான் ரச்சிதா தினேஷுடன் சண்டைபோட்டு பிரிந்துள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களிலில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.