'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சென்னையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில் நான் தவறாக பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் நடிகை குஷ்பு வசித்து வருகிறார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் ‛சேரி' என பதிவிட்டார்.
இது சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என காங்கிரஸ் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவினர் அறிவித்தனர். இதையடுத்து குஷ்பு வசிக்கும் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது: குஷ்பு
சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. நான் தகாத வார்த்தையை பயன்படுத்தவில்லை. அரசு கோப்புகளில் சேரி என்ற வார்த்தை உள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பவை என்ன என தெரிவித்துள்ளார் குஷ்பு.