எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தீபாவளி வந்து பத்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால், தீபாவளிக்கு வெளிவந்த படங்கள் பத்து நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருப்பது தியேட்டர் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரக் காட்சிகளில் மிகவும் குறைவான ரசிகர்களுடன் தியேட்டர்கள் நடைபெற்று வருகின்றன. இரவுக் காட்சிகளை பெரும்பாலான தியேட்டர்களில் ரத்து செய்யும் நிலைதான் இருக்கிறதாம்.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம்தான் வரவேற்பைப் பெற்றது என்றார்கள். ஆனால், அந்தப் படத்திற்கும் கூட இந்த வாரத்தில் வரவேற்பு இல்லையாம். நாளை மறுதினம் ஏழெட்டு படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் அந்தப் படங்களை ரசிகர்கள் வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தீபாவளி வந்தால் குறைந்தது இரண்டு, மூன்று வாரங்களாவது தியேட்டர்காரர்கள் திருப்தியாக இருப்பார்கள். ஆனால், இந்த வருட தீபாவளி தங்களுக்கு ஏமாற்றமே என அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.