20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் நேற்று விஜய் சேதுபதி நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' என்ற மவுன மொழி படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் பேசும்போது “சினிமா புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறது. எமோஷன்களை வெளிப்படுத்தி சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறது. ஆகவே தான் சினிமா ஒரு அற்புதமான ஊடகம். நானும் இதில் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். குறிப்பாக ஒரு நடிகன் என்ற முறையில் ஒவ்வொரு தருணங்களையும் ரசிக்கிறேன். நான் இதை அனுபவிக்கிறேன். நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்றார்.
காந்தி டாக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது ஒரு பிளாக் காமெடி படம். கிஷோர் இயக்கி உள்ளார். விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்பட இருக்கிறது.