'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் |
1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் உடல் பாதிப்பு அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில்வே ஊழியர்கள் சிலர் சாதுர்யமாக செயல்பட்டதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர். உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட அந்த ரயில்வே ஊழியர்களை பற்றி உருவாகி உள்ள தொடர் 'தி ரெயில்வே மேன்'.
இந்த தொடரில் மாதவன், கே.கே.மேனன் திவ்யேந்து சர்மா, பபில்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவ் ராவில் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. தற்போது நாளை மறுநாள் (18ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.