காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சென்னையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே அதில் நடிப்பவர்கள் சிறப்புக் காட்சியாக படங்களைப் பார்க்கத் தேர்வு செய்யும் தியேட்டர் ரோகிணி தியேட்டர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரோகிணி பன்னீர்செல்வம் அத்தியேட்டரின் உரிமையாளர்.
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலரை அங்கு திரையிட்டார்கள். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துச் சென்றதால் அத் தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் நாசமடைந்தன. அதனால், சுமார் பத்து லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்தன. படத்தைத் திரையிடும் போது அதை சம்பாதித்து விடலாம் என அவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆனால், இப்போது 'லியோ' படத்தை அங்கு திரையிடப் போவதில்லை என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள். அதனால், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் நாசமானாலும் பரவாயில்லை, ரசிகர்கள்தான் முக்கியம் என நினைத்த தியேட்டருக்கு படத்தைக் கொடுக்காமல் வினியோகஸ்தர் செயல்படுவது நியாயமல்ல என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
80 சதவீதம், 20 சதவீதம் என்ற அடிப்படையில் 'லியோ' படத்தின் வினியோகத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் செய்வதால் இந்த சிக்கல் எனத் தெரிவிக்கிறார்கள். ரோகிணி தியேட்டர் போலவே, சென்னை, குரோம்பேட்டை, வெற்றி தியேட்டரிலும் படத்தைத் திரையிடவில்லை என அறிவித்துள்ளார்கள்.
சென்னையில் உள்ள எஜிஎஸ் நிறுவனத்தினர் நேற்று இப்படித்தான் அறிவித்தார்கள். பின்னர் படத்தைத் திரையிடுகிறோம், ஒப்பந்தம் செய்துவிட்டோம் என நேற்று இரவு அறிவித்தார்கள். முன்பதிவும் சிறப்பாக நடந்து வருகிறது. அது போல, ரோகிணி, வெற்றி தியேட்டர்களுக்கும் நடக்குமா என்பது விரைவில் தெரிய வரும். இருப்பினும் அது சந்தேகம்தான், இன்னும் 24 மணி நேரம் கூட இல்லை என்றும் கூறுகிறார்கள்.